கார், பஸ் மோதியதால் தீ விபத்து.. டிரைவர் கருகி பலி

 ஊட்டியிலிருந்து திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கீரனூரில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிடுவதற்காக தனியார் மினிபேருந்தில் குழந்தைகள் உட்பட 22 பேர் சென்று கொண்டிருந்தனர்.

அந்த  மினிபஸ் திருப்பூர் கங்கேயம் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது படியூர் பஸ்நிறுத்தம் அருகே காங்கேயத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருந்து.

 அந்த கார் நிலை தடுமாறி மினி பஸ் மீது மோதியது இதில் தீப்பற்றியதில் கார் மற்றும் மினி பஸ் இரண்டும் தீக்கிரையானது. அதிர்ஷ்டவசமாக மினி பஸ்ஸில் பயணித்தவர்கள் தீ பற்றி எரிவதற்குள் பஸ்சிலிருருந்து இறங்கி உயிர் தப்பினர்.

 இருப்பினும் காரில் வந்த ஓட்டுனர் தீயில் எரிந்து சாம்பலானார். காரில் வந்த மற்றவர்கள் தப்பினார்கள்.

இதுகுறித்து அந்தவழியாக சென்றவர்கள் கொடுத்த தகவலின் பேரில்  தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர் சம்பவம் குறித்து அவிநாசிபாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post