பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் துவக்க விழா - மாநகராட்சி மேயர்.என்.தினேஷ்குமார் துவக்கி வைத்தார்

திருப்பூர் மாநகராட்சி, 59-வது வார்டு, முத்தணம்பாளையம், வாய்க்கால் மேடு அருகே  பைவ் ஸ்டார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் துவக்க விழா நேற்று காலை நடைபெற்றது. சங்கத்தலைவர் முத்துசாமி, துணைத்தலைவர் ராஜூ விழாவிற்கு தலைமை தாங்கினார்கள். மாநகராட்சி மேயர் என். தினேஷ்குமார் கலந்து கொண்டு நலச்சங்கத்தை துவக்கி வைத்து மரக்கன்று நடவு செய்து பேசினார். 3-வது மண்டலத்தலைவர் சி.கோவிந்தசாமி லவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்து பேசினார். 

முகாமில் ரத்தஅழுத்தம் பரிசோதனை, இரத்த சக்கரை பரிசோதனை, ரத்தப்பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அன்னதானம், மரக்கன்று 50 பேருக்கு வழங்கப்பட்டது. விழாவில் துணைத்தலைவர்கள் சண்முகசுந்தரம், ராமமூர்த்தி, பொருளாளர் ஜெகநாதன், துணைச்செயலாளர் சங்கர், நாராயணன், சதீஷ்குமார் குட்டி என்ற காளீஸ்வரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர மேயர் தினேஷ் குமாரிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.    

Attachments area
Previous Post Next Post