அண்ணன் தங்கை உறவுமுறை என்பதால் காதலுக்கு எதிர்ப்பு... தற்கொலை முயற்சியில் காதலி பலி, காதலனுக்கு சிகிச்சை

 அண்ணன் தங்கை உறவு என்பதால் பெற்றோர்கள் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். காதலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பட்டாப்புளி தெருவைச் சேர்ந்த மணி  என்பவரது மகன் பெரியசாமி (வயது 21.) கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் நல்லயன் என்பவரது மகள் வித்தியா (வயது 19) முதலாமாண்டு கல்லூரியில் படித்து  வருகிறார். இந்த நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. 


இவர்களது காதல் விபரம் பெற்றோருக்கு தெரியவந்தது. மேலும் இருவரும் அண்ணன் தங்கை உறவு முறை வருவதால் இரு வீட்டு பெற்றோரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த காதலர்கள் நேற்று இரவு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தேவதானப்பட்டி  அருகே தனியார் கல்லூரி பின்புறம் உள்ள தோட்டத்தில் இருவரும் விஷம் குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.

விஷம் குடித்ததில் காதலி நித்தியா சம்பவத்தில் பலியானார்.

மேலும் காதலன் மயக்கமடைந்த நிலையில் மீட்கப்பட்டு பெரியகுளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 பலியான நித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தேவதானப்பட்டி போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்


Previous Post Next Post