கோவில்பட்டியில் அருள்மிகு ஶ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா


கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் அனுமன் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில்  அனுமான் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சீதாதேவி சமேத ஸ்ரீ ராமர் லட்சுமணன் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 


விழாவை முன்னிட்டு இன்று திருக்கோயில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் சிறப்பு பூஜைகளும், கணபதி ஹோமம், தன பூஜை, நவக்கிரக பூஜை, கோ பூஜை, யாகசாலை பூஜைகள் உள்ளிட்டவைகள் நடைபெற்றன. 

அதைத் தொடர்ந்து யாகசாலையில் இருந்து தீர்த்த குடங்கள் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, திருக்கோயில் பிரகாரம் வழியாக எடுத்து வந்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மூலஸ்தானத்தில் 21 அபிஷேக சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவி சத்யா, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Previous Post Next Post