சத்தியமங்கலம் கோட்டமாளம் பகுதிக்கு பேருந்து இயக்க கோரிக்கை. மலைக்கிராம பள்ளி மாணவர்கள் அவதி.


கடம்பூர்-ஏப்-4

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியம் கோட்டமாளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் காடட்டி, காடுபசுவன்மாளம், நீர்குண்டி, சுஜ்ஜல்கரை போன்ற மலைக் கிராமங்களிலிருந்து மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஆனால் பள்ளி நேரத்திற்கு போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பல கிமீ நடந்து சென்று பள்ளிக்கு வர வேண்டியுள்ளது

.அதனால் பள்ளி மாணவ மாணவியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் நடந்து செல்ல இயலாத மாற்றுதிறனாளிகள் மற்றும் மாணவியர்களின் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் மலைப்பகுதி மாணவ,மாணவியர்களின் கல்வி தடைப்படுகிறது.

எனவே மாணவ மாணவியர்களின நலன்கருதி, தாளவாடி பேருந்து கிளையிலிருந்து ஏற்கனவே  இயங்கி வந்த  பேருந்தை ,மீண்டும் தாளவாடி To கோட்டமாளம் வரை பள்ளி நேரத்திற்கு இயக்க போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். நிறுத்தப்பட்ட பேருந்தை மீண்டும் பள்ளி நேரத்திற்கு 

இயக்கினால் கேர்மாளம் மற்றும் திங்களூர்  ஊராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் மலைப்பகுதி மக்களுக்கு பெரும் பயனாக அமையும்.

செய்தியாளர் 

நாராயணசாமி

Previous Post Next Post