தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் அலுவலகங்கள் தூய்மைபடுத்தும் பணி - எஸ்பி பாலாஜி சரவணன் நேரில் ஆய்வு

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் உத்தரவுப்படி தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து காவல் நிலையங்கள், ஆயுதப்படை மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றை தூய்மைபடுத்தும் பணி இன்று நடைபெற்றது. காவல்துறையினரின் தூய்மைபணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் காவல்துறைக்கு சொந்தமான நிலங்களை தூய்மையாக பாதுகாக்கும் பொருட்டு மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை தூய்மை தினமாக கடைபிடிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின்படி அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் இன்று (09.04.2022)  தூய்மைபடுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தூத்துக்குடி ஆயுதப்படை, தூத்துக்குடி தென்பாகம் மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு நேரில் சென்று அங்கு நடைபெற்று கொண்டிருந்த தூய்மைபடுத்தும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post