தாம்பரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆட்டோவை கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்து, விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தாம்பரம் பேருந்து நிலையத்தில் பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து உடனடியாக அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை தடுத்து நிறுத்த தவரிய மத்திய அரசை கண்டித்து செங்கல்பட்டு வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாவட்ட செயலாளர் தேவ அருள்பிரகாசம் தலைமையில் ஆட்டோவில் கயிறு கட்டி ஊர்வலமாக இழுத்து வந்தம் கேஸ் சிலிண்டர் மற்றும் மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்தும் ஒப்பாரி வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர் பொற்செழியன், மாவட்ட பொருளாளர் பம்பல் சுப்பிரமணியம் மாமன்ற உறுப்பினர் முத்துக்குமார் மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட செயலாளர் ப.பூவிழி /எ/ புஷ்பா பல்லாவரம் தொகுதி செயலாளர் திருநீர்மலை தமிழரசன் , தாம்பரம் பெருநகர ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் ப.சாமுவேல், நகரச் செயலாளர்கள் ராமானுஜம் ,ஆதி சாலமன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Previous Post Next Post