டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்விழா குறித்து விசிக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பெண்ணாடம் அடுத்த தாழநல்லூர் கிராமத்தில் விசிக தலைவர் எழுச்சித்தமிழர் ஆணைகிணங்க வருகின்ற ஏப்ரல் 14 புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா  சிறப்பாக கொண்டாடுவது குறித்து விசிக சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நல்லூர் கிழக்கு  ஒன்றிய செயலாளர் இரா.ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் தாழை மணிகண்டன்  வரவேற்றார். சிறப்பு விருந்தினராக திட்டக்குடி தொகுதி துணை செயலாளர் க.வேந்தன், மாநில ஊடக மைய மாநில துணை செயலாளர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் வீ ர. திராவிட மணி, பெண்ணாடம்  பேரூராட்சி மன்ற தலைவர்  அமுத லட்சுமி  ஆற்றலரசு,  பெண்ணாடம் நகர செயலாளர் ம.ஆற்றலரசு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தாழ நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனிவேல் ,ஊராட்சி மன்ற துணை தலைவர் மகேஷ் பாபு,  மாவட்ட துணை அமைப்பாளர் வேல் மணி, செந்தில்குமார், பழனிவேல், ஒன்றிய நிர்வாகிகள் கிளி மங்கலம் பாஸ்கர், சின்னதுரை,  கலந்து கொண்டனர்.




Attachments area
Previous Post Next Post