ஈரோடு மாவட்டம், சத்திய மங்கலம், வடக்குப்பேட்டை திருவிக நகரில், எழுந்தருளி உள்ள,அருள்மிகு ஸ்ரீலட்சுமி நாராயணர் திருக்கோயில் திருக்கல்யாண வைபவ உற்சவ விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.இன்று காலை 6 மணிக்கு லட்சுமி நாராயணன் மற்றும் பரிவார தெய்வங்களு க்கு மகா அபிஷேக பூஜையும், மற்றும் மகா அலங்காரம் மற் றும் தீபாராதனை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து பகல் 3 மணிக்கு மேல் சத்திய நாராயணருக்கு விரத பூஜை கள் நடைபெறும்.மாலை 4 மணிக்கு மேல், மங்கள இசையுடன், கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், மஹா தீபாராதனை கள் நடைபெறும். மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராய ணருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.பின்னர் மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல், மகா அன்னதானம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.