தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு சொத்து வரியை பல மடங்கு உயர்த்தியது. இதனை கண்டித்து பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தது. அதனடிப்படையில் நெல்லை மாவட்ட தேமுதிக சார்பில் வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் கீழே சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேமுதிக நெல்லை மாவட்டச் செயலாளர் மீனாட்சிசுந்தரம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திசையன்விளை தேமுதிக நகர செயலாளரும் 16வது வார்டு பேரூராட்சி உறுப்பினருமான நடேஷ் அரவிந்த் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிகவினர் சொத்து வரி உயர்வை கடும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.