இன்று (11.4.2022) சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில், பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கும் சிறப்பு முகாமை செய்தித் துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை அமைச்சர்கள் வழங்கினர்.
உடன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மருத்துவர் உமா, மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர். நாராயண பாபு மற்றும் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் விமலா ஆகியோர் உடனிருந்தனர்.