கொண்டாநகரத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

 நெல்லையை அடுத்த கொண்டாநகரம் ரோஸ் கார்டன் பகுதியில்  ரோஸ் கார்டன் குடியிருப்போர் நலச் சங்கம் மற்றும் பெஸ்ட் ஆப்டிகல்ஸ் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.சொர்ணம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார். இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கண் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 2வது வார்டு ஊராட்சி மன்ற உறுப்பினர் கணேசன் மற்றும் ரோஸ் கார்டன் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் , உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Attachments area
Previous Post Next Post