சொத்து வரி உயர்வைக் கண்டித்து தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!


சொத்து வரியை வரலாறு காணாத அளவில் 150 சதவீதம் உயர்த்திய திமுக அரசை  கண்டித்தும், சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலருமான எஸ்.பி சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பதாகைகளை ஏந்தியவாறு தமிழக அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.


ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட துணைச்செயலாளர் சந்தனம், இணைச்செயலாளர் செரினாபாக்கியராஜ், மாநில மருத்துவ அணி துணைசெயலாளர் ராஜசேகர், வக்கீல் அணிசெயலாளர் சேகர், 

எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஏசாதுரை, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு,  சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்ஜெபக்குமார், மாணவரணி செயலாளர் விக்ணேஷ், 


முன்னாள் நகரமன்ற தலைவர் ஹென்றி தாமஸ், முன்னாள் மேயர் அந்தோணி கிரேசி , இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தனராஜ் மற்றும் ஜோஸ்வா அன்பு பாலன், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், தொழிற்சங்க செயலாளர் ராஜா, ஓன்றிய செயலாளர்கள் ராஜ்நாராயணன், அழகேசன், காசிராஜன், பகுதி செயலாளர்கள் பொன்ராஜ், ஜெய்கணேஷ், 


பகுதி இளைஞர் அணி செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், துணைச்செயலாளர் டைகர்சிவா, எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர் ரமேஷ்கிருஷ்ணன், வர்த்தக அணி செயலாளர் பட்டுராஜா, 

வக்கீல்கள் முனியசாமி, செங்குட்டுவன், சரவணபெருமாள், வட்டச்செயலாளர்கள் முருகன், மற்றும் அசோகன், உலகநாதபெருமாள், பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post