கோட்டை மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

 தமிழ் புத்தாண்டான சித்திரை திருநாளை முன்னிட்டு  திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.தமிழ் புத்தாண்டான சித்திரை திருநாள்  தமிழகம் முழுவதும் மக்களால் கொண்டாடப்படுகிறது. எப்படி திருப்பூரில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி வீரராகவ பெருமாள் கோவில், பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், கோட்டை மாரியம்மன் கோவில், உள்ளிட்ட திருப்பூரில் உள்ள பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பொதுமக்கள் திரளாக சென்று சாமி தரிசனம் செய்தார்கள். 

திருப்பூர் கோட்டை மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.  மேலும் சித்திரை திருநாளை முன்னிட்டு பல்வேறு கோவில்களுக்கு பொதுமக்கள் தீர்த்தக்குடம் எடுத்து சென்று வழிபட்டனர்.

Previous Post Next Post