பழுதடைந்த அங்கன்வாடி மையத்தை மூடக்கோரி அமமுக வட்டச் செயலாளர் ஆட்சியரிடம் மனு.!

தூத்துக்குடி டூவிபுரம் 11வது தெருவில் உள்ள பழுதடைந்த அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை மூடக்கோரி ஆட்சியர் மற்றும் ஆணையருக்கு அமமுக 30வது வட்டச் செயலாளர் காசிலிங்கம் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகார் மனுவில்; தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 11வது தெருவில் அங்கன்வாடி குழந்தைகள் மையம் 2010 அன்று துவங்கப்பட்டது. தற்போது குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறைகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கழிவறையை இடித்து புதிய கழிவறை கட்டிக் கொடுக்க வேண்டும். அது வரை அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை மூட வேண்டும். குழந்தைகள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படாமல் இருக்க உடனடி நடவடிக்கை தேவை இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என்று மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post