இன்று முதல் அமுலுக்கு வந்தது நாடு முழுவதும் மீன்பிடி தடை காலம்

அரசு அறிவித்த மீன் இனப்பெருக்கத்திற்காக விசைப்படகு மீனவர்களுக்கு 61 நாள் தடை காலம் அமுலுக்கு வந்தது.

வருடந்தோறும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை மீன் இனப்பெருக்கத்துக்காக அரசுக்கு தடைகாலம் அறிவித்தது. இந்நிலையில் இன்று முதல் தடை காலம் அமலுக்கு வந்தது.

 இதனால் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இந்த 61நாள் தடை காலத்தில் படகு உரிமையாளர்கள் தங்கள் படகுகளை பழுது பார்க்கவும் மராமத்து பணிகளை மேற்கொள்வார்கள் மீனவர்களின் நீண்டநாள் கோரிக்கையாக இந்த 61 நாள் தடை காலத்தில் மீனவர்களுக்கு மாற்று தொழில் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்,

 மேலும் அரசு வழங்க கூடிய தடைக்கால நிவாரண தொகையை இந்த மீன்பிடி தடை காலத்திற்குள் வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Previous Post Next Post