மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று- உ பி யில் மீண்டும் முக கவசத்தை கட்டாயமாக்கிய மாநில அரசு.!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் மீண்டும் கோவிட் தொற்று அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கவுதம் புத் நகர், காசியாபாத், ஹாபூர், மீரட், புலந்த்ஷாஹர், பாக்பத் மற்றும் லக்னோவில் பொது இடங்களில் முகமூடி அணிவது கட்டாயம்" என்று உ.பி அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் உ.பி. அரசு இந்த முடிவை அறிவித்துள்ளது.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post