சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கார் பிறந்த நாள் விழா அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை.!


இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி, நவீன இந்தியாவை உருவாக்கிய தலைவர்களில் ஒருவர் என்று போற்றப்படுபவர், பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் என்று அழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இவரின், 131வது பிறந்தநாள் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

திமுக


தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில், கட்சியினர் கவுன்சிலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், சமத்துவ திருநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். 

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

அதிமுக 


அதிமுக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாருமான எஸ் பி சண்முகநாதன் தலைமையில் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹென்றி, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸ், மாவட்ட அவைத்தலைவர் திருபாற்கடல், மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சுதாகர், உட்பட கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்புச் செயலாருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் ராஜகோபால் உட்பட திரளான கட்சியினர் பலர் உடனிருந்தனர்.

பாஜக

தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தலைமையில், திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சின்னத்துரை தலைமையில், மாநகர செயலாளர் கணேஷ் மற்றும் பலர் மாலை அணிவித்தனர்.


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொறுப்பாளர் கரும்பன் தலைமையில், மாநகர செயலாளர் ஞானசேகரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், கவுன்சிலர் தனலெட்சுமி, வக்கீல் சந்தனசேகர் மற்றும் மாடசாமி, சுப்பிரமணி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மாநகர செயலாளர் ராஜா மற்றும் முத்து ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சமத்துவ மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் வில்சன் தலைமையில் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சி மற்றும் பொதுநல அமைப்பு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Previous Post Next Post