வெறிகொண்டு வெளியே வரப்போறான் தலைவன்... இறுதிகட்டத்தை எட்டியுள்ளது வடிவேலுவின் ’நாய் சேகர்’

 சும்மா இருந்த ஆர்மியை வெறி ஏத்தி விட்ட கதையாக பிரபுதேவா உடன் ‘சிங் இன் த ரெயின்’ பாட்டுப் பாடி வீடியோ வெளியிட்டு இருந்தார். வைகைப்புயல் வடிவேலு. வீடியோவைப்பார்த்ததும் எப்போ தான் தலைவன் பெரிய ஸ்கிரீன்ல வருவான்? என்று காத்திருக்கிறார்கள் நம்ம ‘வடிவேலு ஆர்மி’ 


அவர்களுக்குத்தான் இந்த தகவல்...

 என்னன்னு கேட்குறீங்களா?

வேகவேகமாக நடக்குதாம் தலைவன் நடிப்பில் வெளியாகும் ‘நாய் சேகர்’ படத்தின் படப்பிடிப்பு.
நம்ம ஸ்பிரிங் டான்ஸ் நடிகர் பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் கூட்டணியில் கலக்கும் இந்த படம் பெருமளவு எதிர்பார்க்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு பிறகு தலைவன் வடிவேலுவுக்கு இது ஒரு ’செகண்ட் ரவுண்ட்’ தொடக்கமாக இருக்கும் என்று அடித்துக் கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர். 
லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் இந்த  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. என்று தாறுமாறான சந்தோஷ செய்தியை படக்குழு தெரிவித்திருக்கிறது. 
 சென்னை, மைசூர்  பகுதிகளில் நடத்தப்பட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில்,  தற்போது இறுதிக்கட்டமாக சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு வேற லெவலில் படப்பிடிப்பு நடக்கிறதாம். 
வில்லு   படத்தை தொடர்ந்து,  14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இணைந்து ஒரு செம பாட்டு ஒன்று படமாக்குகிறார்கள். இந்த பாடல் தான் இந்த ஆண்டில் குழந்தைகள் கூட பாட இருக்கிற ஹிட்  பாடலாக ஆகும் என்கிறார்கள்.  
லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் படப்பிடிப்பினை வேகப்படுத்தி உள்ளார். 
விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.
எப்படியோ தலைவன் பெரிய ஸ்கிரீனுக்கு வரட்டும்... சிரிப்புத் தோரணமிட்டு வரவேற்கிறோம் எனக் காத்திருக்கிறது தலைவனின் தமிழ் ரசிக உலகம்... 
Previous Post Next Post