தூய்மை பாரத இயக்கம் - பண்ணாரி கோவிலில் பாரதிய ஜனதா கட்சியினர் தூய்மை பணி

  தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தூய்மை பாரத இயக்கத்தின் ஒரு பகுதியாக முக்கியமான பகுதிகளில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது அதன் ஒரு பகுதியாக சத்தியமங்க லத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் , பாரதிய ஜனதா கட்சி ஈரோடு வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செந்தில் குமார் தலைமையில், மண்டல் தலைவர்கள், பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர் .சமீபத்தில் அரசு தொடர் விடுமுறை யொட்டி பண்ணாரியில் குவிந்த ஏராள மான பக்தர்கள் போட்டுச் சென்ற உணவு தட்டுகள், குப்பைகள் ஆகியவற்றை அகற்றி, கோவில் வளாகப் பகுதியை தூய்மைபடுத்தினர்.



Attachments area
Previous Post Next Post