சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு.!

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரிய வழக்கில் சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் விசாரணை 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்ஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.  இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு சாத்தான்குளம் காவல்நிலைய முன்னாள் ஆய்வாளர்  ஸ்ரீதர், முன்னாள் சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

 இந்த கொலை வழக்கானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர்  ஜாமின் கோஉரிய வழக்கு இன்று நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, பெனிக்ஸ் இன் தாயார் திருமதி. செல்வராணி அவர்களும் தன்னை இந்த வழக்கில் இணை மனுதாரராக அனுமதிக்குமாறு கோரினார். மேலும் ஸ்ரீதர் ஜாமீன் மனுக்கு அரசு தரப்பான சிபிஐ சார்பில் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதனையடுத்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post