தூத்துக்குடி எஸ்பி அலுவகத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் சமத்துவநாள் உறுதி மொழி ஏற்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் "சமத்துவநாள்" உறுதிமொழி எடுக்கப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ம் நாள் சமத்துவ நாளாக கொண்டாடுமாறு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று (14.04.2022) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவுபடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையில் காவல் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு ‘சமத்துவ நாள்” உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

இதில் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை காவல் ஆய்வாளர் ரேனியஸ் ஜேசுபாதம், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை உதவி ஆய்வாளர் கணேச மணிகண்டன், அலுவலக கண்காணிப்பாளர் மயில்குமார், உட்பட உதவியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post