பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா

திருப்பூர் குறிஞ்சி நகரில் (ஷெரீப் காலனி) அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் 08.04.2022 மற்றும் 09.04.2022 ஆகிய நாட்களில் குழந்தைகளுக்கு பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளிச் செயலாளர் டாக்டர் சிவகாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி முதல் நாள் விழாவை இனிதே துவங்கி வைத்தார். இறைவணக்கத்துடன் விழா ஆரம்பம் ஆனது. பள்ளி தலைமை ஆசிரியை திருமதி. சியாமளா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். பள்ளித் துணைச் செயலாளர் திருமதி. வைஷ்ணவி நந்தன் அவர்கள் சீனியர் கே.ஜி. குழந்தைகளுக்கு பட்டமளித்து அவர்களை சிறப்பித்தார். 

பள்ளி இயக்குனர் திரு. சக்திநந்தன் அவர்கள் குழந்தைகளுக்கு விருது வழங்கினார். மாணவ மாணவியரின் நடனம் கண்களுக்கு விருந்தாக அமைந்தது. வண்ணமயமான கே. ஜி. குழந்தைகளின் அணிவகுப்பு, நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் மேஜிக் நிகழ்ச்சி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இரண்டு நாட்களிலும் பெற்றோர்கள் அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இறுதியில் மாணவர்கள் நன்றியுரை வழங்க நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.


Previous Post Next Post