தூத்துக்குடி - தென் மண்டல ஐஐி அஸ்ரா கார்க் அதிகாரிகளுடன் ஆலோசனை.!

தூத்துக்குடி மாவட்டத்தில்  போதைபொருட்களை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறையினருடன் தென் மண்டல ஐஐி அஸ்ரா கார்க் ஆலோசனை நடத்தினார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற போதைபொருட்களை முற்றிலும் ஒழித்தல் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவர்கள் மற்றும் ரவுடிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் போன்றவை குறித்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் போன்ற போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது குறித்தும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ரவுடிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று (04.04.2022) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் முன்னிலையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், நீண்டகால நிலுவையில் உள்ள வழக்குகள், நிறைவேற்றப்பட வேண்டிய பிடியாணைகள், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும் தென் மண்டல காவல்துறை தலைவர் அறிவுரை வழங்கினார்.

இந்த அறிவுரை கூட்டத்தில் தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கோபி, சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன், திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி நகரம் கணேஷ், ஸ்ரீவைகுண்டம் வெங்கடேசன், மணியாச்சி சங்கர், கோவில்பட்டி உதயசூரியன், விளாத்திகுளம் பிரகாஷ், சாத்தான்குளம் ராஜூ, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு சம்பத், மதுவிலக்கு பாலாஜி, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு பிரேமானந்தன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், மாவட்ட குற்ற பிரிவு ஜெயராம், ஆயுதப்படை கண்ணபிரான், மாவட்ட குற்ற ஆவண பிரிவு காவல் ஆய்வாளர் ஜெரால்டின் வினு, மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உள்ளிட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post