சத்தி தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் பந்தல் திறப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்,வடக்கு பேட்டை அருள்மிகு தண்டுமாரியம்மன் திருக்கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு சத்தியமங்கலம் அத்தாணி சாலையில், ஆண்டுதோறும்  மகேந்திர மேதர சமூகத்தின் சார்பில், பக்தர்களுக்கு நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு, நீர்மோர், கம்மங்கூழ் வழங்கு வது வழக்கம். இந்த ஆண்டும் அருள்மிகு தண்டு மாரியம் மன்திருக்கோயில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, மகேந்திர மேதர சமூகத்தின் சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டு, பக்தர்களுக்கு, குடிநீர், கம்மங்கூழ் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் நிகழ்ச்சிஏற்பாட்டாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கானஏற்பாடுகளை சத்தியமங்கலம் நகர அ.இ.அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலாளர் பந்தல் ஜி.பூபதி செய்திருந்தார்.




Previous Post Next Post