ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின்இணைப்புகள் - கானொலி காட்சி மூலம் முதல்வர் பேச்சு

 தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம்  சார்பில், சென்னை தமிழ்நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம், கானொலி காட்சி வாயி லாக ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகள் மத்தியில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின் கலந்துரையாடி, விழா பேரூரை நிகழ்த்தினார். இக் கானொலி காட்சி சத்திய மங்க லத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் மின் வாரிய செயற் பொறியாளர் (பொது) சின்னச்சாமி, கோட்டப் பொறியாளர் குலசேகரப் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியக் குழத் தலைவர் கே.சி.பி. இளங்கோ, சத்திய மங்கலம் நகர்மன்றத் தலைவர் ஜானகி ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். மேலும் தாளவாடி, பவானிசாகர், பு.புளியம்பட்டி, சத்திய மங்க லம் பகுதியைச் சார்ந்த விவசாயிகள், மின்வாரிய உதவி செயற் பொறியாளர் கள், உதவி மற்றும் இளம் மின்பொறி யாளர்கள், அலுவலர் கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்த கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சத்தியமங்கலம் மின்வாரிய கிழக்கு மற்றும் மேற்கு உதவி செயற் பொறியாளர்கள் குமாரசாமி, மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Attachments area
Previous Post Next Post