தூத்துக்குடியில் பர்னிச்சர் குடோனில் தீ விபத்து!


தூத்துக்குடியில் உள்ள பிரைட் பர்னிச்சர் நிறுவனத்துக்கு சொந்தமான குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.

தூத்துக்குடியில் பிரைட் பர்னிச்சர் உரிமையாளர் சேஷன் என்பவருக்குச் சொந்தமான பர்னிச்சர் பொருட்கள் தயார் செய்யும் நிறுவனம் எட்டயபுரம் பைபாஸ் ரோட்டில் உள்ளது. 

இக்குடோனில், வீட்டிற்கு தேவையான கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு உபயோகம் பொருட்கள் தயார் செய்யும் பணி இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கையில், திடீரென அங்கு தீப்பற்றியது. இதனை சுதாரித்து கொண்டு பணியாளர்கள் வேகமாக வெளியேறி விட்டனர்.


பின்னர், இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் மிகப் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

தீயணைப்பு துறையினரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

Previous Post Next Post