ராமநாதபுரத்தில் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் பறிமுதல், போலீசார் விசாரணை

ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்தில் இருந்து பசும்பொன் நகர் ரயில்வே கேட் அருகில்   வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது கீழக்கரையில் இருந்து இராமநாதபுரம் வந்த யூசுப் சுலைமான் என்பவர் போலீசாரை  கண்டதும் ஓட முயற்சித்ததாக  கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகம் அடைந்த  போலீசார் யூசுப் சுலைமானை  பிடித்து விசாரணை நடத்தியதில் 2 பாலித்தீன் பைகளில் 160.90 கிராம் வைரம் வைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ராமநாதபுரம் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தியதில்  முன்னுக்கு பின் முரணான பதிலை கூறியதை அடுத்து கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது முதல் கட்ட விசாரணையில் ஒரு கோடி மதிப்பிலான வைரக் கற்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இதனுடைய சர்வதேச மதிப்பு 2 கோடி என போலீசார் தெரிவித்தனர் - இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்த நிலையில் வைரக் கற்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இது தொடர்பாக தனிப்படை குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்

Attachments area
Previous Post Next Post