வலுதூக்கும் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது சூலூர்.!


ஏப்ரல் 18

கோவை இராமநாதபுரம் ஸ்ரீ வீரமாருதி தேகப்பயிற்சி சாலை மற்றும் யூ எம் பாடிலைன் ஜிம் இணைந்து இராமநாதபுரம் சாண்டோ எம் எம் ஏ சின்னப்பத்தேவர் திருமண மண்டபத்தில் நடந்த, மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் 83கிலோ எடைப்பிரிவில் 110கிலோ எடையுள்ள வலு தூக்குதலில் சூலூரைச் சேர்ந்த சூ க விஜயகுமார் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்ததை, நண்பர்களும் உறவினர்களும் ஊர்ப்பொதுமக்களும் கொண்டாடி வாழ்த்தினர் 

கோவை மாவட்டம் வலுதூக்குபவர் சங்கத்தலைவர் என் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்த இப்போட்டியில்,தேசிய நடுவர்களான எஸ் ஏ வி சின்னச்சாமி, எஸ் செந்தில்குமார், எஸ் ஆறுமுகம், அந்தோணிசாமி மிஸ்டர் தென்னிந்தியா, என் பிரபு மிஸ்டர் தமிழ்நாடு, ஏ பீட்டர் மிஸ்டர் தமிழ்நாடு, 

வெள்ளலூர் ஈ எஸ் மருதாச்சலம், கோவை எஸ் நசீர், சிங்கை ஆடிட்டர் ஜெயராஜ் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் ந பழனிச்சாமி ,தமிழ்நாடு உடற்கட்டுச் சங்கத்தலைவர் லிஜோசுங்கத் ஆகியோர் கலந்து கொண்டனர்

Previous Post Next Post