பவானிசாகர் அருகே பவானி ஆற்றில் அடித்து சென்றவரை தேடும் பணி தீவிரம். இரண்டு நாட்களாகியும் பிரேதம் கிடைக்கவில்லை.


பவானிசாகர் -

பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் எல்.பி.பி. வாய்க்காலில் 17ம் தேதி மாலை சுமார் 6 மணிக்கு ஒருவர் ஆற்றில் அடித்து செல்வதாக பவானிசாகர் காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் ஆற்றுப்பகுதிக்கு சென்றபோது, அந்த நபர் ஆற்றில் முழ்கிவிட்டது தெரியவந்த நிலையில், 

ஆற்று பகுதியில் காவல்துறையினர் தேடி வந்த போது, அரசு விதைப் பண்ணை அருகே, TN -40 P 1051  என்ற இருசக்கர வாகனம் கரையோரத்தில் நிறுத்தப்பட்டு, அதில் உடைகள் மாட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில், வாகனவிபரம் அறிந்த காவல்துறையினர் ஆற்றில் மூழ்கிய நபர் ராஜேந்திரன். வயது - 58 தந்தை கிருஷ்ணசாமி கவுடர்,.செல்வபுரம் சிக்கதாசம் பாளையம் மேட்டுப்பாளையம் என்ற முகவரியை சார்ந்தவர் என்பதும், 


அவர் , மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் லேப் - டெக்னிஷியனாக பணிபுரிந்து வருகிறார் என கண்டறிந்து குடும்பத்தினருக்கு தகவல் அளித்த நிலையில், கடந்த 2 நாட்களாக பிரேதம் கிடைக்கப்பெறாத நிலையில், இன்று சத்தியமங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் பவானி ஆற்றில் பிரேதத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பவானிசாகர் காவல் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மணிவேல் ஆகியோர் வழக்குபதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Previous Post Next Post