திட்டக்குடி நகராட்சியில் அமைச்சர் கணேசன் ஆய்வு

 கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால்களை தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ கணேசன் ஆய்வு செய்தார் கழிவு நீர் தேங்காமல் நிற்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர் அப்பகுதியில் அரசு அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார் மேலும் 14 வது வார்டில் பார்வையிட்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இதில் ஒன்றிய செயலாளர் பட்டுர் அமிர்தலிங்கம், நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா கோதண்டம், துணைத்தலைவர் விபிபி பரமகுரு, நகர இளைஞரணி அமைப்பாளர் சேதுராமன், மங்களூர் ஒன்றிய சேர்மன் கே என்டி சுகுணா சங்கர், கவுன்சிலர்கள் இளையராஜா, ரெங்க. சுரேந்தர், வட்டாட்சியர் கார்த்திக், காவல் ஆய்வாளர் அன்னக்கொடி, மற்றும் கட்சி உட்பட பலர் உடனிருந்தனர்.




Attachments area
Previous Post Next Post