தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் மாநில உயர்மட்டக்குழு கூட்டம்

 சேலம் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் மாநில உயர்மட்டக்குழு கூட்டம் மற்றும் சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் சித்தனூர், தளவாய்பட்டி எஸ்.பி.எம் திருமண மஹாலில் நடைபெற்றது. இதில் மாநில மாநாடு நடத்துதல், உட்பிரிவு பயிற்சி அரசாணையை அமல்படுத்த கோருதல், நகர நில அளவை பட்டா மாறுதல் பரிந்துரை அமல்படுத்த கோருதல், உறுப்பினர்களுக்கு குழு காப்பீடு திட்டத்தை அமல்படுத்துதல் போன்றவை இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தை மாநிலத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி நடத்தினார். 

சேலம் மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பொருளாளர் வாசுதேவன், ராமசாமி , முருகன், கோபிநாத், சக்திவேலு , பிரதீப் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட செயலாளர் இல ரமேஷ் வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் சுரேஷ் விளக்க உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் முத்துச்செல்வன், நல்லா கவுண்டன், விஸ்வநாதன், அரங்க வீரபாண்டியன், ராஜரத்தினம், விஜயபாஸ்கர் , தியாகராஜன், ரகுவரன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள். இக்கூட்டத்தின் இறுதியில் மாரியப்பன் நன்றியுரையாற்றினார். 

Attachments area
Previous Post Next Post