சுதந்திர போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர்களின் மணிமண்டபங்களை செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர்  வீ.ப.ஜெயசீலன், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுதந்திரபோராட்ட வீரர் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் நினைவு இல்லம், சுதந்திரபோராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கம் மணிமண்டபம், வல்லநாடு வீரன் வெள்ளையத்தேவன் மணிமண்டபம், கயத்தார் வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் மற்றும் கட்டாலங்குளம் வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபம் ஆகியவற்றை செய்தி மக்கள் தொடர்புதுறை இயக்குநர்  வீ.ப.ஜெயசீலன், இன்று (15.04.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் பொதுமக்கள் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கு தயாரகும் மணவர்களுக்கு தேவையான புத்தகங்கள் அதிகளவில் வைக்குமாறும், தேவையான புகைப்படங்கள் வைக்குமாறும், பார்வையாளர்கள் வசதிக்காக குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டுமென்றும், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்தையும் முறையாக பராமரிக்க வேண்டுமென்று பணியாளர்களுக்கும், துறைசார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post