தாம்பரத்தில் தேசிய அளவிலான கராத்தே போட்டி- ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்பு

மேற்கு தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தேசிய அளவிலான 8வது கிக்ஸ் ஆண்ட் பஞ்சஜ் கோப்பை போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பங்கேற்க சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, கோவை, திருநெல்வேலி என தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். கத்தா, குமுத்தே ஆகிய பிரிவுகளில் தனிதனியே போட்டிகள் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு பிரிவுகளிலும் வீரர்கள் தங்களது தனி திறமையை வெளிப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றனர். 5 வயது முதல் 18 வயது வரையிலான மாணவர்கள் இந்த தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கிக்ஸ் ஆண்ட் பஞ்சஸ் 2022 கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை சென்சாய் கார்த்திகேயேன் மற்றும் வனிதா ஆகியோர் வழங்கினர். கடந்த 2 ஆண்டுளாக கொரோனா காரணமாக இது போன்ற தேசிய அளவிலான போட்டிகளில் நடத்தபடாத சூழ்நிலையில் தற்போது இது போன்ற போட்டிகள் நடத்தி மாணவர்களின் திறமைகள் வெளிபடுத்தி உள்ளனர்.

Previous Post Next Post