“மின்னகம்” - மின் நுகர்வோர் சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (16.4.2022) சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள “மின்னகம்” - 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மின் நுகர்வோர் சேவை மையத்தை (புகார்கள் குறித்து - சேவை மைய எண்: 9498794987) பார்வையிட்டு ஆய்வு செய்து, குறை தீர்க்கப்பட்ட பயனாளிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார். 

நிகழ்வில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, இ.ஆ.ப., ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளனர்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post