பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு - மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மக்களை பாதிக்கக்கூடிய பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் மற்றும் கட்டுமான பொருட்கள், விலையேற்றத்தைக் கண்டித்தும், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியினர் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்திற்க்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல் ராஜ், சுடலையாண்டி, தூத்துக்குடி மாமன்ற உறுப்பினர்கள் சந்திரபோஸ், எடின்டா, பிச்சையா, முன்னாள் மாவட்ட தலைவர் ஏடிஎஸ் அருள், ஐஎன்டியூசி தலைவர் ராஜ், மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவி தனலட்சுமி, மேற்கு மண்டல தலைவர் சாந்தி, மாவட்ட செயலாளர் கோபால், கிழக்கு மண்டல தலைவர் ஐஸ் என் சில்வா மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post