எனக்கு இப்படி ஒரு அழகான டீச்சர் இல்லியே..தமிழச்சி தங்கபாண்டியனை புகழ்ந்து தள்ளிய நடிகர் பாக்கியராஜ் !

 சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள முத்தமிழ்ப் பேரவையில் நடந்த விழாவில், நடிகை பூர்ணிமா பாக்கியராஜின் சுயசரிதை  புத்தகத்தை தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட ரம்யாகிருஷ்ணன் மற்றும் சினேகா பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தமிழச்சி தங்கபாண்டியன், ரம்யா கிருஷ்ணன், சினேகா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள். 

நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜ் பேசுகையில், ‘ என்னுடைய மனைவியில் புத்தகம் வெளியாவது சந்தோஷமாக இருக்கிறது. கூட்டத்துக்கு தலைமைக்குத் தான் வணக்கம் சொல்ல வேண்டும். எம்.பி., என்பதையும் தாண்டி எனக்கொரு அழகான டீச்சர் தமிழச்சி தங்கபாண்டியன். நான் படிக்கிற காலத்தில் இப்படி ஒரு டீச்சர் இல்லையே? ஒன்னு நல்லா படிப்பு வந்திருக்கும்.. இல்லா விட்டால் படிப்பே வராமல் போயிருக்கும். என்று பாக்கியராஜ் அவரது ஸ்டைலில் பேச, தமிழச்சி தங்கபாண்டியன் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார். 

மேலும் இந்த விழாவில் பேசிய நடிகர் பாக்கிராஜ், ‘நான் பூர்ணிமாவின் கணவர் என்பதை விட அப்பா, அம்மா ஸ்தானத்தில் கலந்து கொள்கிறேன் என்று பேசி தனது மனைவி பூர்ணிமாவையும் மெய் சிலிர்க்க வைத்தார்.

இந்நிகழ்வில்  நடிகர் நடிகையர் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றார்கள். 
Previous Post Next Post