ஆளுநர் தேநீர் விருந்து - தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு.!

 

ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பதாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!

ஜனநாயக மரபுப்படி செயல்படும் உயர்ந்த அமைப்பான சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு மதிப்பு தரப்படவில்லை

நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்கு காலவரையறையை ஆளுநர் தெரிவிக்கவில்லை

நீட் விலக்கு மசோதா 208 நாட்களாக ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது வேதனை தருகிறது

நீட் மட்டுமின்றி கூட்டுறவு சங்க திருத்த மசோதா உள்பட 11 மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன என அமைச்சர்கள் பேட்டி.

#TNGovernment  #RNRavi  #ThangamThennarasu  #MaSubramaniyan

Ahamed

Senior Journalist

Previous Post Next Post