ஓராண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் காணொலி காட்சி மூலம் முதல்வர் பேச்சு

 வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ் நாடு மின்சார வாரியம் தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் தமிழ் நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் தமிழ் நாடு மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி மூலம் கானொலி காட்சி வாயிலாக ஓராண்டில் ஒரு லட்சம் மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகள் மத்தியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடி விழா பேரூரை நிகழ்த்தினார். 

இக்கானொலி காட்சி குடியாத்தம் கல்லூரி வளாகத்தில் மின் வாரிய செயல்பொறியாளர் வி.எம்.வெங்கடாசலபதி உதவி செயல் பொறியாளர் ஆர் சீனிவாசன் ஏற்பாடு செய்திருந்தனர் இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் நகர மன்ற தலைவர் செளந்தரராஜன் வட்டாட்சியர் லலிதா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும் குடியாத்தம் பேரணம்பட்டு ஒன்றிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் மின்வாரிய உதவி செயல் பொறியாளர்கள் உதவி மற்றும் இளம் மின்பொறியாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Attachments area
Previous Post Next Post