போலீசார் குறித்த தனி நீதிபதியின் சர்ச்சை கருத்து நீக்கம் : ஐகோர்ட்டு உத்தரவு.!

காவல்துறையில் 90 சதவீதம்  ,அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் ,10 சதவீத  அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த சர்ச்சையான கருத்தை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . 

தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சார்பில் சென்னை  ஐகோர்ட்டில்   மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது .

இந்நிலையில் காவல்துறையில் 90 சதவீதம்  அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக ,தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது 

Ahamed

Senior Journalist

Previous Post Next Post