காவல்துறையில் 90 சதவீதம் ,அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாகவும் ,10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உள்ளதாக தனி நீதிபதி தெரிவித்த சர்ச்சையான கருத்தை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
தனி நீதிபதியின் இந்த கருத்துக்களை நீக்கக்கோரி தமிழக டிஜிபி சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது .
இந்நிலையில் காவல்துறையில் 90 சதவீதம் அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளதாக ,தனி நீதிபதி தெரிவித்த கருத்து நீக்கம் செய்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது