பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்


மக்களை பாதிக்கும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி சிதம்பரம் நகர் பகுதியில் சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 வது தமிழ்நாடு மாநில மாநாட்டின் அறை கூவல் படி பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலையை தினசரி உயர்துவதை நிறுத்த கோரியும், டோல் கேட் கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்த கோரியும் 


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சிபி எம் தூத்துக்குடி மாநகர் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர் செயலாளர் தா.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், ஒன்றிய செயலாளர் சங்கரன், மாவட்ட க்குழு உறுப்பினர் காசி, எம்.எஸ்.முத்து, மாரியப்பன், மாநகர் குழு ஆறுமுகம், முத்து கிருஷ்ணன், காஸ்ட்ரோ, குமார வேல், இசக்கி முத்து, தி.சீனிவாசன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post