கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.!*


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு  நன்றி தெரிவித்த கனிமொழி எம்.பி


தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான  கனிமொழி கருணாநிதி எம்.பி கலந்து கொண்டு 522 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார் 

தொடர்ந்து அவர் பேசுகையில் கோவில்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ நிறைய பாடுபட்டு இருக்கிறார். இந்த மேடையில் கட்சி மாச்சரியங்களை தாண்டி  அவருக்கு எனது நன்றியை உங்கள் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.


நிகழ்வில் கல்லூரி முதல்வர் நிர்மலா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, நகராட்சி சேர்மன் கருணாநிதி, ஒன்றிய பெருந்தலைவர் கஸ்தூரி, ஒன்றிய செயலாளர் முருகேசன், கல்லூரி முதல்வர் நிர்மலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post