சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்டது ஜீரகள்ளி வனச்சரகம். இந்த வனச்சரகதுக்கு உட்பட்ட கல்மண்டிபுரம் சோழகர் தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் சதாசிவம் (50).இவர் தன்னுடைய 2 ஏக்கர் தோட்டத்தில் முட்டைக்கோஸ் சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் சதாசிவத்தின் தோட்டத்துக்குள் புகுந்து முட்டைக்கோஸ் பயிர்களை மிதித்தும்,தின்றும் சேதம் செய்தது. இதனை கண்ட விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானைகள் அங்கே முகாமிட்டு முட்டைகோஸ் பயிர்களை முழுவதுமாக சேதம் செய்தன.
மேலும் தோட்டத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கம்பி வேலி களையும் சேதம் செய்தன.
இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறும் போது" யானைகள் தின்று சேதம் செய்தவைகளுக்கு அரசு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். மேலும் வனப்பகுதியை ஒட்டி ஆழமான அகழி தோண்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்"என்றனர்.