சூலூர் நீலம்பூர் ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம்

 சூலூர் நீலம்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தூர் கிராமத் தொடக்கப்பள்ளியில் அகம் மக்கள் சேவை மையமும் கோவை லோட்டஸ் கண் மருத்துவமனையும் இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்று 15 நபர்கள் கண் புரை அறுவை சிகிச்சைக்கு செல்ல இருப்பதாக அகம் ஜெகதீசன் கூறினார் . அகம் நண்பர்கள் மூலம் முன்னெடுத்த இத்தார்மீகப்பணி எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு முழுத்திருப்தியைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,  கலந்து கொண்ட பொதுமக்களும் மனம் மகிழ்ந்து, இதைப்போன்ற தொடர் நல்ல சேவைகளை செய்யுமாறு ஊக்கப்படுத்தியது நிறைவைத்தந்தது. 

அகம் நிர்வாகிகளான வடிவேல்,ஜெயக்குமார், கௌதம்பிரபு முன்னின்று நடத்திய இந்த கண் சிகிச்சை முகாமில்  நீலம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் என் என் சண்முகசுந்தரம் ஒன்றிய கவுன்சிலர் தாரணி ஊராட்சி மன்ற உறுப்பினர் கே எம் மணியன், அகம் நண்பர்கள் விவேக்குமார், செல்வராஜ், வாசுதேவன் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Previous Post Next Post