பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து நெல்லை சந்திப்பில் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவை பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வலியுறுத்தியும்,  பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர வலியுறுத்தியும்புதிய தமிழகம் கட்சி சார்பில் நெல்லை சந்திப்பு ரயில்வே நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.புதிய தமிழகம் நெல்லை மாவட்ட செயலாளர் முத்தையா ராமர் தலைமை தாங்கினார். 

புதிய தமிழகம் நிர்வாகிகள் எட்வட்ராஜ், மணிகண்டன், ஜெயபால், வழக்கறிஞர் பெருமாள், ஆகியோர் முன்னிலை  வைத்தனர்.சிறப்பு அழைப்பாளராக மாநில பொறுப்பாளர் சிவக்குமார் கலந்துகொண்டு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து கண்டன கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ராமகிருஷ்ணன் சரஸ்வதி முருகன் சுரேந்திரன், கார்த்திக்,  பொட்டல் முருகன், சக்திவேல், மாஞ்சோலை தேவராஜ், முத்து, முப்புடாதி, பாலமுருகன், பழனி, குமார், சிந்து உதயா, கணேசன், தவசி, கருப்பசாமி, பலவேசம், ராமர், பூலையா, கிருஷ்ணன்,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post