பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - மெல்ல குறைந்து வரும் நீர்மட்டம்

ஈரோடு மாவட்டம் , சத்திய மங்கலம் அருகே பவானிசாகர் அணை உள்ளது.இந்த அணை ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய மண் அணை ஆகும் .இந்த   அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர்   ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 2. 47 இலட்சம்  ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்களும் பயன் பட்டு வருகின்றன. இங்கு முறையே.அரக்கன்கோட்டை,  தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் காளிங்க ராயன் வாய்க்கால், கீழ்பவானி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணைக்கு  பவானி ஆறு மூலம்  வரும் நீர் பில்லூர் அணையில் சேமிக்கப் பட்டு, உபரிநீர் இந்த அணைக்கு வரும்.  மேலும் மேயாறு மூலமும் நீர்வரத்து வருகிறது. , தற்போது 105 அடி உயரம் கொள்ளளவு கொண்ட பவானிசாகர்  அணை  யில், இருந்து    விவசாய  பாசனத்திற்காக  கீழ் பவானி வாய்க்காலில் 2380 கனஅடி நீரும், காளிங்கராயன் வாய்க் காலில்    500   கன அடி நீரும், பவானி ஆற்றில்  கரையோர குடிநீர் திட்டங்கள் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவைக் காக 200 கன அடி நீரூம் வெளி யேற்றப் படுகிறது .அணைக்கு விநாடிக்கு 254  கன அடி  நீர் வருகிறது. அணையில் இருந்து விநாடிக்கு  3580 கன அடி நீர் வெளியேற்றப் படுகிறது. தற்போது அணையில் 86.14 கனஅடி நீர் இருப்பு உள்ளது.. அணையில் இருந்து தொடர்ந்து நீர் வெளியேற்றப்படு வதாலும். மழை இல்லாத நிலையில் அணையின் நீர்மட்டம் மெல்ல குறைந்து வருகிறது.




Previous Post Next Post