முறியாண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம்

 முறியாண்டம் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  ஊராட்சி மன்ற தலைவர் ரவிக்குமார் தலைமையில் துணைத்தலைவர் கனகராஜ் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்நிகழ்வில் ஊராட்சி வரவு செலவுகளை பார்வையிடுதல்,  குடிநீர் பைப்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தல், பொது சுகாதாரம் - தெருக்கள் மற்றும் சாக்கடை சுத்தம் செய்தல், முறியாண்டம் பாளையம் ஊராட்சியில் பிலிசிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு கொள்முதல் செய்தல், கான்கிரீட் தளம் 5 இடங்களில் அமைத்தல், தெருவிளக்கு பராமரிப்பு செய்தல், புதிய தெரு விளக்கு  கொள்முதல்செய்தல்  , வீட்டுவரி சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி செயலாளர் மகாலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Attachments area
Previous Post Next Post