தூத்துக்குடியில் பொதுமக்களின் தாகம் தீர்க்க நீர்,மோர் பந்தல் - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.!


பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கம் அறிந்து தாகம் தீர்க்க நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று திமுக தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது அதனடிப்படையில் 

தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள தூத்துக்குடி சட்டமன்ற அலுவலகம் முன்பு வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்,மோர் பந்தல் திறப்பு விழா இன்று நடைபெற்றது 


இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்து  பொதுமக்களுக்கு தண்ணீர்பழம், மோர்,ஜூஸ் உள்ளிட்டவைகளை வழங்கினர்.


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மேற்கு மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்த் சேகரன், மேற்கு பகுதி செயலாளர் ரவீந்திரன், கவுன்சிலர்கள் அதிர்ஷ்டமணி, கனகராஜ் பொதுக்குழு உறுப்பினர் கோட் ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post