அருளவாடி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே அருளவாடி கிராமத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அருளவாடி அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர்,விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில் மல்லன்குழி ஊராட்சி மன்ற தலைவர் புட்டுதேவம்மா,அருளவாடி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியினர்,அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினனை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Previous Post Next Post