தூத்துக்குடியில் மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் - சண்முகையா எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.!


தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்ட 2021- 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கடற்கரை விளையாட்டு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தருவைகுளம் கடற்கரையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமையேற்று போட்டியுனை தொடங்கி வைத்தார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் பேட்ரிக் வரவேற்றார்.


இப்போட்டியானது, ஒவ்வொரு ஆண்டும் கால்பந்து, கபடி மற்றும் கையுந்துபந்து மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

ராமநாதபுரம், நாகப்பட்டினம், கடலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இருந்து ஆண்கள், பெண்கள் பங்கேற்றனர்.



இப்போட்டிகள் இன்று தொடங்கி நாளை வரை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. மாவட்டத்திலிருந்து வீரர் வீராங்கனைகள் 260 பேர் கலந்து கொண்டனர். 

கடற்கரை கால்பந்து விளையாட்டில் 5வீரர்களும்,  கடற்கரை கபாடி போட்டியில் 6 வீரர்களும், கையுந்து போட்டி யில் இரண்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post